Monday, September 16, 2019

மங்களம் உண்டாக.!

அன்பர்களுக்கு வணக்கம்.

கீழ்க்கண்ட மந்திரத்தை காலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் 27 தடவை வீதம் சொல்லிவர அனைத்தும் நன்மையாகவே நடக்கும். இரண்டு வேளை சொல்ல முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளையாவது சொல்லி வாருங்கள்.

நல்லதே நடக்கும்

ஓம் சர்வ மங்களம்
பூமி மங்களம்
அக்னி மங்களம்
வாயு மங்களம்
சூர்ய மங்களம்
சந்திர மங்களம்
ஜெகத் மங்களம்
ஜீவ மங்களம்
தேக மங்களம்
மனோ மங்களம்
ஆத்ம மங்களம்
ககன மங்களம்
உதக மங்களம்

ஓம் சர்வ மங்களம் சர்வ மங்களம் சர்வ மங்களம் ஓம்

பணப்பிரச்சினைகள் தீர.!

அன்பர்களுக்கு வணக்கம்.

பணம் சார்ந்த பிரச்சினைகள் தீர கீழ்க்கண்ட மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வாருங்கள். நல்ல பலன் தெரியும்.

*லலிதம் ஸ்ரீதரம் லலிதம் பாஸ்கரம் லலிதம் சுதர்சனம்*

கைமேல் பலனை உணரலாம்.

நன்றி.

நோய்கள் தீர மந்திரம்.!

அன்பர்களுக்கு வணக்கம்.

அதிகமான நோய்களால் பாதிப்பு அல்லது நோய்களுக்கு வீண் செலவு செய்வது போன்ற சூழலை நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்து வருகிறீர்கள் எனில் கீழ்க்கண்ட மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வாருங்கள். நல்ல பலன் தெரியும். நோயில்லா வாழ்வை பெறலாம்.

*ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் க்லௌம் அர்ஹம் நமக*

கைமேல் பலனை உணரலாம்.

நன்றி.

எண்ணங்கள் நிறைவேற.!

குருவே சரணம்.

உங்கள் எண்ணங்களும் வேண்டுதல்களும் பலிதமாக கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் ஒரு அமைதியான இடத்தில் அமைதியான மனநிலையில் இருந்து கொண்டு வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளாகவோ குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் செபித்து வர உங்கள் நம்பிக்கையின் ஆழத்தைப்பொறுத்து உடனடி பலனை உணரலாம்.

*மந்திரம்*

*லலிதம் சுப்பிரமணியம் லலிதம் குமாரம் லலிதம் ஷண்முகம்.*

நல்லதே நடக்கும்.

அன்புடன்
Dr.போகர் வசீகரன்
போகர் சித்தாந்தசபை
பழநி.
9488008816

பொருளாதார தடைகள் விலக.!

குருவே சரணம்.

நன்மைகள் நடக்கவும் பொருளாதாரம் மேம்படவும் தடைகள் விலகவும் எதிர்காலம் சந்தோசமாக அமையவும் கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் அமைதியான மனநிலையில் இருந்து கொண்டு வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளாகவோ குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வீதம் செபித்து வர உங்கள் நம்பிக்கையின் ஆழத்தைப்பொறுத்து உடனடி பலனை உணரலாம்.

*மந்திரம்*

*ஓம் க்லீம் கிருஷ்ணாய நம.*

நல்லதே நடக்கும்.

அன்புடன்
Dr.போகர் வசீகரன்
போகர் சித்தாந்தசபை
பழநி.
9488008816

கனவுகள் நிறைவேற.

குருவே சரணம்.

உங்களுடைய எதிர்கால கனவுகளை அது எதுமாதிரியாக இருந்தாலும் வலிமைப்படுத்திட தடையின்றி நடந்திட கீழ்கண்ட மந்திரச்சொல்லை தினந்தோறும் வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ 52 முறை சொல்லிவர 7 நாட்களில் இருந்தே மாற்றத்தை உணரலாம். இது சுமேரியர்கள் பின்பற்றிய இறை வழிபாட்டு முறைகளில் பயன்படுத்தப்படும் மந்திர சொற்களில் ஒன்றாகும். அற்புத பலனை தரும்.

நாம் சொல்லும் எந்த ஒரு விசயமும் சுயபரிசோதனை செய்யாமல் சொல்லப்படுவதில்லை. நம்பிக்கையுடன் செய்து பலனை பெறுங்கள்.

*மந்திரம்*

*உர்நம்மு.*
*URNAMMU*

நல்லதே நடக்கும்.

அன்புடன்
Dr.போகர் வசீகரன்
போகர் சித்தாந்தசபை
பழநி.
9488008816

அரசு வேலை கிடைக்க.

குருவே சரணம்.

அரசு வேலை கிடைக்கவும் அரசு தொடர்பான விசயங்களில் நன்மைகள் நடக்கவும் கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் அமைதியான மனநிலையில் இருந்து கொண்டு வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளாகவோ குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் வீதம் செபித்து வர உங்கள் நம்பிக்கையின் ஆழத்தைப்பொறுத்து உடனடி பலனை உணரலாம். அரசு சார்ந்த விசயங்களில் அனுகூலமான பலனை பெறலாம்.  மேலும் மந்திரம் செபிக்கும் போது வலது கையில் செம்பு டம்ளர் அல்லது ஆரஞ்சு கலர் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வைத்துக்கொண்டு செபம் நிறைவடைந்த உடன் அந்த நீரை குடித்தும் வரலாம். இன்னும் சிறந்த பலனை பெறலாம்.

*மந்திரம்*

*ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸஹ சூர்யாயை நம.*

நல்லதே நடக்கும்.

அன்புடன்
Dr.போகர் வசீகரன்
(Dr of Yoga and Meditation)
போகர் சித்தாந்தசபை
பழநி.
9488008816